Pages

Saturday, August 13, 2011

சக்தி டிவி - கிழியும் முகமூடி...


shakthi Junior Super Star ( செல்லமாய் ஒரு குரல் தேடல்) - இலங்கையின் முன்னணி தொலைக்காட்சியான சக்தி ரிவியினால் குழந்தைச் செல்வங்களின் இசையறிவை வளர்ப்பதற்கும் அவர்களுடைய இசைத் திறமைக்கு மேடையமைத்துக் கொடுப்பதற்குமென வடிவமைக்கப்பட்ட ஓர் இசை நிகழ்ச்சி.

இந்தியாவின் Vijay TV ,d;  Airtel Super Singer Junior நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின் அதே சாயலில் ஏராளமான விளம்பரங்களுடன் இலங்கைச் சிறார்களின் மனதில் ஆசை விதையை விதைத்த ஓர் இசை நிகழ்ச்சி. ‘மெகா’ சீhpயல்களுக்கு அடுத்ததாக சக்தி ரிவியின் அதிகப்படியான நேயர்களைக் கொண்ட நிகழ்ச்சி இதுவென்றால் அது மிகையாகாது. இத்தகைய உன்னத நோக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சியில் சிறுவா;களுடன் சிபாரிசும் செல்வாக்கும் புகுந்து விளையாடுவதும் நடுவர்கள் நடிகர்களாவதும் வேதனைக்குhpய விடயமாகும்.

எதிர்பார்ப்புகளுடனும் கனத்த கனவுடனும் 3வது சுற்றுக்கு மேடையேறிய சிறார்களின் திறமைகள், திரைமறைவில் நிகழ்ந்த தில்லுமுல்லுகளால் மழுங்கடிக்கப்பட்டது மன்னிக்கபடமுடியாத குற்றமாகும். மிக நன்றாக பாடுவதாக 3 நடுவர்களாலும் நடுமேடையில் பாராட்டப்பட்ட சிறுவர்கள் சிலர் தவிர்க்கப்பட்டு, அதே 3 நடுவர்களாலும் பாட்டில் சுருதியே சேரவில்லை என்று குறைகூறப்பட்ட வேறு சில சிறுவர்கள் 4வது சுற்றுக்கு தொpவானது எவ்வாறு என்ற கேள்வி அனைத்து நியாயமான பெற்றோர்களின் மனதிலும் உருவானது. உடனுக்குடன் புள்ளிகள் தொpவிக்கப்படாததும், தொpவானவர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாததும் கபட நாடகங்களுக்கான காலத்தைப் பெறுவதற்குதானோ என்ற ஜயமும் உண்டாகிறது. சில சிறுவர்களுக்கு மாத்திரம் அவர்கள் தொpவான விடயம் உடனடியாக (திரைமறைவில்)அறிவிக்கப்பட்டது எவ்வாறு?.

இதற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் நடுவரொருவரை கேட்டபோது, அவர் ‘அங்கே எமது முடிவுகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை’ என வேதனைப்பட்டு வெட்கித் தலை குனிந்தார். பாடல் தொpவின் போது, காதுக்கினிய சங்கீத பாடல்களை தொpவுசெய்யுங்கள் , கும்மாங்குத்து பாடல்களையும் துள்ளிசைப்பாடல்களையும் தவிருங்கள் என்று நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. ஆனால் போட்டி நிகழ்ச்சியின் போது இசையறிவைப் பாPட்சிக்கமுடியாத துள்ளல் இசையில் உருவான பாடல்களுக்கு உருகிவிட்டோம் என்று நடுவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது எவ்வாறு?

‘நாங்கள் குழந்தைகளின் மனதைப் புண்படுத்த மாட்டோம், அனைத்துக் குழந்தைகளின் பாடல்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம்’ என்று 1வது சுற்றில் மார்தட்டிக் கொண்ட சக்தி ரிவி, முதல் நாள் தொடக்கம் இறுதி நாள்வரை நிகழச்சிகளைப் பார்த்து இன்றாவது நாம் வரமாட்டோமா என ஏங்கிய பல குழந்தைகளின் மனஉளைச்சலையும் வேதனைகளையும் புரிந்து கொண்டிருக்கவில்லை.

இத்தனை தில்லு முல்லுகளுக்கு மத்தியில் அவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்திய விதம் அவர்களது நேயர்களை அலைக்களித்து வாசலில் பல மணிநேரம் காக்கவைத்தமை அவர்கள் நேயர்களுக்கு எந்தளவுக்கு கரிசனை காட்டுகிறார்கள் என்பதற்கு நல்ல எடுத்து காட்டு.2வது சுற்றுக்கு 8.30 மணிக்கு கலையகத்திற்கு வரும்படி கடிதம் அனுப்பிய சக்தி ரிவியினை நம்பி காலை 2.00 மணிக்கு மலையக தோட்டமொன்றில் இருந்து பல மைல்கள் நடந்து பின்னர் பலமணிநேரம் பேருந்தில் பயணம் செய்து 8.30 மணிக்கு கலையகத்தை அடைந்த ஓர் சிறுமி 11.00 மணிவரை சிறுநீர் கழிக்கவும், உட்காரவும் இடமின்றி வாயிற்கதவருகே காக்கவைக்கப்பட்டிருந்தது வருந்தி வேதனைப்படவேண்டிய விடயமாகும்.
பொறுப்பு வாய்ந்த சமூக கடமைகளைக் கொண்ட ஒரு வெகுசன ஊடகம் சிபாhpசுக்கும் செல்வாக்குக்கும் விலைபோய், பலத்த இழப்புக்களை சந்தித்த ஓர் சமூகத்தை மேலும் பல வருடங்கள் பின்தள்ள முயற்சிப்பது கொதிப்படையச் செய்கின்றது.

இவ்வாறாக இரட்டை வேடம் போடும் ஊடகங்களை மக்கள் வெறுத்து ஒதுக்கும் நாள் வெகு துhரத்தில் இல்லை என்பதில் ஜயமில்லை.

1 comment:

  1. துரை 4 பதிவவுகளோடு நிற்பாட்டியாச்சா?

    ReplyDelete