Pages

Saturday, January 26, 2013

ஷரிஆ சரியா?

நிமிர்ந்து நின்றால் கூரை இடிக்கும், கால் நீட்டி படுத்தால் சுவர்கள் நசுக்கும் குடிசையிலிருந்து வந்த ஏழை ரிசானா நபீக் சவூதி அரசினால் தலை அறுத்து கொலை செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.


ஷரிஆ சட்டம் சரியா? 

ஷரிஆ சட்டத்தில் "சிலை வைத்து வணங்குபவர்" களுக்கு (idolatry) மரண தண்டனை. (இதன்படி சகல இந்து பௌத்த கிறிஸ்தவர்களையும் மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.)

ஷரிஆ சட்டத்தில் தீவிரவாதத்துக்கு மரண தண்டனை. (ஒசாமா பின் லேடன், முல்லா முஹம்மது ஓமர் மற்றும் அவர் கூட்டத்தாரை தவிர..)

ஷரிஆ சட்டத்தில் கொலை செய்தால் மரண தண்டனை. (இடி அமீன் இறுதிவரை சவுதி அராபியாவில் வாழ்ந்து இயற்கையாக மரணித்தான்)

சாட்சிகள் இல்லாதவிடத்து குற்றம் நிரூபிக்கப்படமுடியாது என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார். தனது மனைவி ஆயிஷா வேறொருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சாட்சிகள் இல்லை மற்றும் இறை வாக்கின் பெயரில் குற்றம் சாட்டியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.


ரிசானா கொலை வழக்கில் கொலை செய்ததை  (செய்திருந்தால் )  யாரும் பார்க்கவில்லை. சாட்சிகளும் இல்லை. அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ". ரிசானாவின் மொழிபெயர்ப்பாளி ஒரு மலையாளி. ஏன் அங்கே தமிழர்கள் இல்லையா?  அன்றையதினம் , ரிசானா  கோபமாக இருந்தாள் "  இது ஒன்றே அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட போதுமாய் இருந்தது.



இதையெல்லாம்  பார்க்கும் போது ஷரியா ஏழைகளையும் எளியவர்களையும் தண்டிப்பதற்காக (கடவுளை சாட்டி ) பணக்காரன் படைத்த சட்டம் என்றே தோன்றுகின்றது.


கடுமையான சட்டங்கள் இருப்பதாலேயே குற்றங்கள் குறைவாக காணப்படுகின்றது என்று நினைப்போர் தயவு செய்து இறுதியாக வந்த புள்ளி விபரங்களைப்பாருங்கள். சவூதி  அரேபியாவை விட எத்தனை நாடுகளில் கொலை குறைவாக காணப்படுகின்றது என்பதை. நோர்வே ஜப்பான் ஸ்வீடன் நாடுகளில் ஷரியா உண்டா?

குற்றம் செய்பவன் தன்னை "பதினான்கு வருடங்கள் சிறையில் தானே போடுவார்கள்.. தூக்கில் போட மாட்டார்கள்" என்று நினைத்து குற்றம் செய்வதில்லை . "நான் செய்வது யாருக்கும் தெரியாது" என்று நினைத்தே செய்கிறான்.

தண்டனைகள் தேவை தான். ஆனால் அவை குற்றத்துக்கு தகுந்த தண்டனைகளாக இருக்க வேண்டும். சிரச்சேதம் செய்வதை எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

ஒரு சகோதரன் அவனது ஆக்கத்தில் எழுதியது கீழே

"1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார். 
2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்."


அந்த கூலி என்ன ? உமது அன்னைக்கு அல்லது சொந்த சகோதரியை பலிகொடுத்துவிட்டு அவர் குற்றமற்றவாராயிருப்பின் அல்லா சிறந்த கூலி கொடுப்பான் என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?


காட்டுமிராண்டித்தனமான கண்மூடித்தனமான ஈவிரக்கமற்ற தண்டனைகளை வழங்கும் இரத்தக்காட்டேரி நாட்டுக்கும் அதை ஆதரிக்கும் மிருகங்களுக்கும், கடவுள் என்று ஒருவன் இருப்பானெனில் ....  அதுதான் இல்லையே.. பிறகு என்ன _____ ஐ எழுதுவது .

No comments:

Post a Comment